Posts

பெரும்பாணாற்றுப்படை – அறிமுகம்

  பெரும்பாணாற்றுப்படை – அறிமுகம் தமிழ் மொழியின் தொன்மை இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து . தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் . தொல்காப்பியம் கி . மு . மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல் [1] . அந்த நூலில் , இருநூறுக்கும் மேலான இடங்களில் , தொல்காப்பியர் , “ என்ப ”, “ மொழிப ”, ” கூறுப ”, “ என்மனார் புலவர் ” என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார் .   இதிலிருந்து , தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது . எள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் எண்ணெய் . அதுபோல் , இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும் . ஆகவே , கி . மு . மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இருந்திருக்க வேண்டும் . அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை . தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள் வடிவத்தில்தான் இருந்தன . அந்தச் செய்யுள்கள் அனைத்தும் யாப்பிலக்கணத்துக்கேற்ப இயற்றப்பட்ட தனிப்பாடல்க...